திருத்தணியில் வெளியாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி தொடர்பாக சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ரசிகர்கள் வருகை இல்லாததால், கோல்டன் மினி சினிமா திரையரங்கின் ஒரு ஸ்கிரீனில் காலை 9 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. திருத்தணியில் இன்று காலை 9 மணிக்கு, மொத்தம் மூன்று திரையரங்குகளில் 'ஜனநாயகன்' திரைப்படத்தை திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில், கோல்டன் மினி சினிமா திரையரங்கில் உள்ள இரண்டு ஸ்கிரீன்களிலும் படம் வெளியிட திட்டமிடப்பட்டது. அதில் ஒரு ஸ்கிரீனுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகி, ஹவுஸ்ஃபுல் நிலையை எட்டியிருந்தன. ஆனால் மற்றொரு ஸ்கிரீனில் ஒரு டிக்கெட் கூட விற்பனையாகவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் காட்சி ரத்து செய்யப்பட்டதாக திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் வருகை இல்லாதது, அந்தப் பகுதியில் திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Back to Top News
Top
July 23, 2026 at 7:20 AM
திருத்தணியில் 'ஜனநாயகன்' முதல் காட்சி ரத்து... ரசிகர்கள் வராததால் ஒரு ஸ்கிரீன் மூடப்பட்டது
Polimer News