சென்னை அருகே மீஞ்சூர் அத்திப்பட்டில் சுற்றிவளைத்த போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பிய 6 பேர் கொண்ட போதை மாத்திரை விற்பனை கும்பலை பிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வண்ணாரப்பேட்டை, புழல் உள்ளிட்ட பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய பூபாலன் என்பவர், அத்திப்பட்டு பகுதியில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்து போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு சுற்றிவளைத்த போலீசாரை பூபாலன் மற்றும் அவருடன் இருந்த கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பி ஓடியது. தாக்குதலில், உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலையில் காயம் ஏற்பட்டது.
Back to Top News
Top
July 19, 2026 at 10:57 AM
சுற்றிவளைத்த போலீசார் மீது போதை மாத்திரை விற்பனை கும்பல் தாக்குதல்...!
Polimer News