போதைப் பொருள் புழக்கத்தை தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் விஜயை, கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இரு மாநில எல்லைகளில் நடக்கும் போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரமேஷ் சென்னிதலா, கேரளத்தில் போதைப்பொருளை ஒழிக்க செயல்படுத்தப்படும் ஆபரேஷன் டூஃபான் ((Toofan)) திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக விஜய் உறுதி அளித்துள்ளதாக கூறினார். கேரள மாநில போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தூதராக உள்ள மோகன்லாலும், தமிழக முதலமைச்சர் விஜய்யும் இணைந்து கேரளாவில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதற்கான பணிகள் நடந்து வருவதாக ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார். போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த 5 டி.ஜி.பி.க்கள் மூலம் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டகாகவும் ரமேஷ் சென்னிதலா கூறினார்.