திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை என சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகியிருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், அங்கு திடீரென நேரில் ஆய்வு மேற்கொண்டார். நாள் ஒன்றுக்கு 40 பிரசவம் நடைபெறுவதால், இடப்பற்றாக்குறையை களைவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, கர்ப்பிணிகள் மற்றும் அவர்களுடன் வரும் உதவியாளர்களிடம் யாரேனும் கையூட்டு பெறுவதாக புகார் வந்தால் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டீன் எட்வினா வசந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.