சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற ஐ.டி. நிறுவன பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மணிகண்டன் என்ற இளைஞரை கைது செய்த போலீசார், இதே இளைஞர் 2 மாதங்களுக்கு முன் வேறொரு பெண்ணிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பிச்சென்றதாக தெரிவித்துள்ளனர்