திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வட புதுப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் யூ டர்ன் அடிக்க முயன்ற பள்ளிப் பேருந்தின் முன்பக்கம் ஒரு கண்ட்டெய்னர் லாரியும் பின்பக்கம் ஒரு கண்ட்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் வேனில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் ஐவருடன் ஓட்டுநரும் காயமடைந்தார். தங்களது பிள்ளைகளைப் பள்ளிப் பேருந்தில் ஏற்றுவதற்காகக் காத்திருந்த பெற்றோர் கண்முன்னே இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், அப்பகுதியில் பல ஆண்டுகளாக மேம்பாலம் அமைத்துத் தருமாறு கேட்டு வருவதாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Back to Top News
Top
September 19, 2026 at 6:39 AM
நெடுஞ்சாலை 'U' வளைவில் திரும்ப முயன்ற பள்ளிப் பேருந்து விபத்து.. 5 மாணவர்கள் காயம்!
Polimer News