மொராக்கோவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகள் சாரை சாரையாக ஸ்பெயின் நாட்டின் வட ஆப்பிரிக்க எல்லைப் பகுதியான செவுட்டாவிற்குள் (Ceuta) நுழைந்து வருகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் படகுகள் மற்றும் காற்று அடைக்கப்பட்ட மிதவைகள் மூலம் கடல் வழியாகவும், எல்லை வேலி தடைகளைத் தாண்டியும் ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் ஸ்பெயின் உச்ச நீதிமன்றம், கடல் வழியாக வரும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்பக் கூடாது எனத் தீர்ப்பளித்த நிலையில், அதனை மனித கடத்தல் கும்பல்கள் தவறாகப் பயன்படுத்தி, மக்களை தூண்டிவிட்டு ஊடுருவலை அதிகரிக்கச் செய்துள்ளதாக ஸ்பெயின் அரசு குற்றம் சாட்டியுள்ளது.