தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், ரங்கராஜ், மாதவராஜ் ஆகிய ஓட்டுநர்கள் மூன்று பேரிடம், ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களிடம் மொத்தம் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக சுமேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் நிறுவனத்தை நடத்தி வந்த அவர், நிறுவனத்தை மூடிவிட்டு மதுரையில் தலைமறைவாக இருந்தபோது போலீசார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.