தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், ரங்கராஜ், மாதவராஜ் ஆகிய ஓட்டுநர்கள் மூன்று பேரிடம், ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களிடம் மொத்தம் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக சுமேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் நிறுவனத்தை நடத்தி வந்த அவர், நிறுவனத்தை மூடிவிட்டு மதுரையில் தலைமறைவாக இருந்தபோது போலீசார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.
Back to Top News
Top
September 10, 2026 at 5:19 AM
ரஷ்யாவில் ஓட்டுநர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7.5 லட்சம் மோசடி..
Polimer News