டென்மார்க் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்தின் பாதுகாப்பு மீதான "நிரந்தரக் கட்டுப்பாட்டை" அமெரிக்காவுக்கு வழங்கும் வகையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது அமெரிக்காவிற்கு ஒரு 'கனவு நனவான தருணம்" என அவர் கூறியுள்ளார். ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள கிரீன்லாந்து தீவில் அமெரிக்கா தனது ராணுவத்தை கணிசமாக விரிவாக்கவும், நிரந்தர ராணுவ இருப்பை ஏற்படுத்தவும் அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இடையேயான இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. அமெரிக்காவின் எதிரி நாடுகள் கிரீன்லாந்தில் ராணுவ முகாம்களை அமைப்பதையோ அல்லது முக்கிய முதலீடுகளைச் செய்வதையோ இந்த ஒப்பந்தம் முற்றிலுமாகத் தடை செய்கிறது. கிரீன்லாந்து எதிர்காலத்தில் டென்மார்க்கிடம் இருந்து சுதந்திரம் பெற்றாலும், இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு மட்டுமே தீவில் சில குறிப்பிட்ட "முக்கியமான முதலீடுகளை" செய்ய அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Back to Top News
Top
September 19, 2026 at 8:22 AM
கிரீன்லாந்து மீது அமெரிக்காவுக்கு நிரந்தர பாதுகாப்பு கட்டுப்பாடு? – டிரம்ப் அறிவித்த புதிய ஒப்பந்தம்
Polimer News