பட்டாசு ஆலைகளில் வெடி விபத்தை தடுத்து, பாதுகாப்பாக பட்டாசுகளை தயாரிப்பது குறித்து சிவகாசியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட தயாராக உள்ள 60 பட்டாசு ஆலைகளுக்கான அனுமதியை வழங்காமல் அரசு அதிகாரிகள் தங்களை நாயை விட மோசமாக நடத்துவதாக பட்டாசு உற்பத்தியாளவர் ஒருவர் ஆதங்கத்துடன் கூறினார். இதைக்கேட்ட அமைச்சர் கீர்த்தனா பட்டாசு தொழிலை மேம்படுத்த தேவையான முழு ஒத்துழைப்பையும் த.வெ.க. அரசு வழங்கும் என்று உறுதி அளித்தார்.
Back to Top News
Top
July 21, 2026 at 10:23 AM
சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களுடன் அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை..!
Polimer News