ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மனைவி அண்ணாலெஜினோவா திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்று வழிபாடு செய்தார். அண்மையில் பவன் கல்யாணுக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சை நல்லபடியாக முடிய வேண்டும் என வேண்டிக் கொண்ட அண்ணாலெஜினோவா வேண்டுதலை நிறைவேற்ற பாதயாத்திரை சென்றதாகக் கூறப்படுகிறது.