சென்னையில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த காவல்துறைக்கு 50 அதிநவீன இருசக்கர ரோந்து வாகனங்களை வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 350 சிசி திறன் கொண்ட ஹோண்டா நிறுவன வாகனங்களில், காவல்துறையினரின் பயன்பாட்டுக்கான சைரன், வாக்கி-டாக்கி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அவசர நேரங்களில் சம்பவ இடங்களுக்கு காவலர்கள் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கும் நோக்கிலும், குறுகிய இடங்களில் கணிகாணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் இருசக்கர ரோந்து வாகனங்கள் வாங்கப்பட உள்ளன.