மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற பாடத்திட்ட தயாரிப்பு குழு கூட்டத்தில் பேசிய அவர், மாணவர்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் குறித்து கற்றுத்தரப்படும் என்று கூறினார். புத்தகங்களில் எழுத்துகளை குறைத்து வண்ணப் படங்கள் இடம்பெறும் என்றும், கதைகளின் வடிவில் கணிதம் கற்றுத்தரப்படும் என்றும் தெரிவித்தார்.