தமிழகத்தில், அனைத்து குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தக்கோரிய வழக்கில், தமிழக அரசின் இயற்கை வளத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களுக்கு கனிம வளங்கள் உரிய விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், பிற மாநிலங்களுக்கு கடத்தப்படுவதையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மிகவும் முக்கியமான பிரச்சினை எனத் தெரிவித்த நீதிபதிகள், இயற்கை வளத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Back to Top News
Top
August 13, 2026 at 10:23 AM
அனைத்து குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தக்கோரிய வழக்கு..!
Polimer News