நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களை அவர்களது உறவினர்கள் தேடி வரும் அதே நேரத்தில், அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான உடல்கள் அழுகும் நிலையில் உள்ளதால், சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, சிட்வான் (( Chitwan )) வனப்பகுதியில் அவை மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. பாரத்பூர் மருத்துவமனை பிணவறையின் கொள்ளளவைத் தாண்டி அதிகளவில் வைக்கப்பட்டுள்ள உடல்கள் மிக வேகமாகக் அழுகி வரும் நிலையில், பாதிக்கும் மேற்பட்டவைகளை அடையாளம் காண முடியாத அளவுக்கு முகங்கள் சிதைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னாட்களில் உறவினர்கள் உரிமை கோரினால் கண்டறியும் வகையில், அடக்கம் செய்யப்படும் ஒவ்வொரு உடலிலிருந்தும் DNA மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. காடுகளுக்கும் ஆறுகளுக்கும் பெயர் பெற்ற நேபாளத்தின் எழில்மிகு சிட்வான் மாவட்டம், அடையாளம் தெரியாத உடல்களைப் புதைக்கும் இடமாக மாறியுள்ளது.