டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.! 3 சிறார்கள் உட்பட 4 பேர் கைது டெல்லியின் வடமேற்கு பகுதியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 சிறார்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். செப்.13ஆம் தேதி நடந்த கொடூரம் வடமேற்கு டெல்லியில் உள்ள ஸ்வரூப் நகர் பகுதியில் கடந்த செப்.13ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர், கத்தியால் தாக்கி கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் உடலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள திறந்தவெளியில் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. அழுகிய நிலையில் உடல் பாகங்கள் மீட்பு சிறுமியின் உடல் திறந்தவெளியில் கிடந்த நிலையில், நாய்கள் தின்றது போக எஞ்சிய உடல் பாகங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 சிறார்கள் உட்பட 4 பேர் கைது இந்த வழக்கில் 3 சிறார்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, உடல் மோசமாக சிதைந்திருந்ததால் ஆரம்பக்கட்டத்தில் சிறுமியின் பாலினத்தைக் கூட உறுதி செய்ய முடியாத நிலை இருந்ததாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Back to Top News
Top
September 18, 2026 at 10:13 AM
டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரக் கொலை.. 3 சிறார்கள் உட்பட 4 பேர் கைது
Polimer News