திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரையில் வேலை முடிந்து நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சித்திரவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கி அத்து மீற முயன்ற சித்திரவேலுவிடம் இருந்து தப்பி ஓடிய அந்தப் பெண் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து தப்பியதாகக் கூறப்படுகிறது.