சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு மாறானவை. பொதுமக்கள் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார். குறைவாக வரி செலுத்தியவர்களுக்கு மட்டுமே தரவுகளின் அடிப்படையில் திருத்திய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்தத் திருத்திய மதிப்பீட்டில் ஆட்சேபனை இருப்பவர்கள் 15 நாட்களுக்குள் வட்டார துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம். அதற்கான தீர்வு 30 நாட்களுக்குள் காணப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
Back to Top News
Top
August 12, 2026 at 7:24 AM
பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை..!
Polimer News