அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப, டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அரசுக்கு சொந்தமான விமான நிறுவனத்தை உருவாக்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பிரத்யேக விமான சேவையைத் தொடங்க அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. சுமார் $140 மில்லியன் டாலர் மதிப்பில் ஆறு Boeing 737 ரக விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் டிரம்ப் நிர்வாகம் கையெழுத்திட்டுள்ளது.