இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய பயங்கரத் தாக்குதலில், பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, அவரது மகனான மொஜ்தபா காமேனி, ஈரானின் புதிய உச்சத் தலைவராக பொறுப்பேற்றார். இதற்கிடையில் தான், போர் சூழலால் தள்ளிவைக்கப்பட்ட அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள், அவர் உயிரிழந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு ஜூலை 4 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தநிலையில்தான், இறுதிச் சடங்கிற்குப் பிறகு ஆற்றிய முதல் பொது உரையில், மறைந்த தனது தந்தையும் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியின் மரணத்திற்கு பழிவாங்க 13 உலகத் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ஒரு 'பழிவாங்கும் பட்டியலை' வெளியிட்டது, உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரண்டாம் இடத்தில் இருப்பவர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு என்றும் அவர்களது நெற்றியில் குறிபார்த்து சுடும் திட்டம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உள்ள 11 பேர் கொண்ட பட்டியலில் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத்துறைச் செயலர் பீட் ஹெக்ஸெத் ஆகியோர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது அறிக்கையில் மொஜ்தபா கமேனி, "பழிவாங்குவதே நமது தேசத்தின் விருப்பம், அது தவிர்க்க முடியாமல் நிறைவேற்றப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளார். டிரம்ப்பைக் கொலை செய்ய, ஈரான், திட்டமிட்டிருந்ததாக இந்த வாரம் பல அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. -மனோசெளந்தர் மனோ
Back to Top News
Top
July 14, 2026 at 1:14 AM
ட்ரம்ப், பெஞ்சமின் உயிருக்கு குறி... வெளியான 13 உலகத்தலைவர்கள் லிஸ்ட் ...ரிவேஞ்ச் பட்டியலை லீக்செய்த காமேனி
Polimer News