தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கரிசல்குளம் விளக்கு பகுதியில் தனியார் ஹோட்டலில் நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்தில் இருந்து 40 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னைக்கு சென்று கொண்டிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த ஜஸ்டின் மற்றும் அவரது மனைவி இயற்கை உபாதைக்காக கீழே இறங்கியபோது, இருக்கையில் வைத்திருந்த நகை மற்றும் உடைமைகள் பேக் காணாமல் போனதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சக பயணிகளிடம் சோதனை நடத்திய நிலையில், பேக் கிடைக்காததால் பேருந்தினை விடுவித்தனர். கடந்த ஆண்டும் இந்த ஹோட்டலில் இதே போன்ற திருட்டு சம்பவம் அரங்கேறிய நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.