லார்ட்ஸில் இந்திய அணியை சந்தித்த சச்சின் டெண்டுல்கர்... மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்த வீரர்கள்! இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், லண்டனின் புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் புகைப்படங்களை BCCI தனது சமூக வலைதளங்களில் "Priceless moments as the legendary Sachin Tendulkar catches up with Team India at Lord's" என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளது. இந்த சந்திப்பின்போது சச்சின் டெண்டுல்கர், இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினருடன் கலந்துரையாடி, அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான சச்சினை நேரில் சந்தித்தது இந்திய அணி வீரர்களுக்கு உற்சாகமான தருணமாக அமைந்தது. லார்ட்ஸில் நடைபெற்ற இந்த சந்திப்பு சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் அனுபவமும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் இளம் இந்திய வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.