இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் திருவிழா.. 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வேளாண் பொருள்கள் விற்பனை கரூர் மாவட்ட இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில், 3-ஆம் ஆண்டு இயற்கை வேளாண் திருவிழா நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் மரபு விதைகள், நெல் ரகங்கள், வேளாண் சார்ந்த பொருள்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், பெண்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் அரங்குகளைப் பார்வையிட்டனர்.