விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பொறியியல் கல்லூரி விடுதி மற்றும் சமையல் அறையில் சமூக நலத்துறை அமைச்சர் வன்னி அரசு திடீரென ஆய்வு மேற்கொண்டார். விடுதியில் உள்ள உணவகத்திற்கு சென்ற அவரும் ஆட்சியரும் உணவகத்தில் உணவு அருந்தினர். அப்போது சாம்பாரில் ஏன் கத்திரிக்காய் இல்லையென கேட்ட அமைச்சரிடம், கத்தரிக்காய் கரைந்துவிட்டதாக சமையல் ஊழியர் தெரிவித்தார். கல்லூரி விடுதி வளாகத்தில் கழிவுநீர் முறையாக வெளியேறாமல் தேங்கி நிற்பதால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். அப்போது கல்லூரி நிர்வாகம் மூலம் விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
Back to Top News
Top
August 24, 2026 at 5:08 AM
அரசு பொறியியல் கல்லூரி விடுதி மற்றும் சமையல் அறையில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வு..!
Polimer News