காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவு உள்ளதால், சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு தொடரும் எனத் தெரிவித்தார்.