நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இரண்டு பேரை கொன்ற ஆட்கொல்லி புலி வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. ஓவேலி பேரூராட்சிக்குட்படட லார்ஸ்டன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 9 மற்றும் 21 ஆம் தேதிகளில் இரண்டு தோட்டத் தொழிலாளர்களை புலி அடித்துக் கொன்றது. இதனை அடுத்து, அந்தப் புலியை பிடிக்க 244 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டதுடன், 13 இடங்களில் கூண்டுகளும் வைக்கப்பட்டது. வட்டப்பாறை என்னும் இடத்தில் புலி சிக்கிய நிலையில் அது ஆட்கொல்லிப் புலிதான் என்பதை வனத்துறை உறுதி செய்துள்ளது.