வேலூர் மாவட்டம் கந்தனேரி அருகே டீக்கடையில் நகை பையை மறந்து வைத்துச் சென்ற ஆசிரியரிடம் அதனை மீட்டு போலீசார் ஒப்படைத்தனர். ஆசிரியர் ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில், டீக்கடைக்கு விரைந்து சென்ற போலீசார் பையில் இருந்த 14 சவரன் நகை மற்றும் 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.