ரத்தீஷ் போன்ற நபர்கள் தான் திமுக அரசையே நடத்தி வந்துள்ளதாகவும், மக்களுக்கு இவற்றையெல்லாம் சொல்வதற்காக தான் முதலமைச்சர் தனது பதிலுரையில் ரத்தீஷின் பெயரை குறிப்பிட்டார் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் ஊழல் வழக்கில் தேடப்படும் நபரான ரத்தீஷ் உதயநிதியின் குறிஞ்சி இல்லத்தில் 24 மணி நேரமும் இருந்தவர் எனவும், அரசின் முக்கியமான துறைகளில் வசூல் செய்து தரும் பவர் புரோக்கராக இயங்கியவர் எனவும் அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.