எல்-நினோ எனப்படும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசிடம் தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் நிதி கேட்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மத்திய கூட்டுறவு அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை தமிழ்நாடு அரசு சார்பில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் நெல் சாகுபடி பரப்பளவு குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும், எல்-நினோ காலத்தில் கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் விவசாயக் கடன் வழங்கும் சூழல் ஏற்படலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
Back to Top News
Top
July 20, 2026 at 1:55 PM
எல்-நினோ காலநிலை மாற்றத்தால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல்..!
Polimer News