இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்... பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய்க்கு அழைப்பு! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் BCCI இரண்டு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ள ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு பதிலாக பிரின்ஸ் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹாம்ஸ்ட்ரிங் காயம் காரணமாக ஹர்ஷித் ராணா, இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதேபோல், வருண் சக்கரவர்த்தியும் ஹாம்ஸ்ட்ரிங் காயம் காரணமாக ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியாத நிலையில், அவரது இடத்தை சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் நிரப்பவுள்ளார். இந்த இரண்டு மாற்றங்களையும் இந்திய ஆண்கள் தேர்வுக்குழு உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இரு வீரர்களும் தங்களது அணிகளுடன் விரைவில் இணைவார்கள் என்று BCCI தெரிவித்துள்ளது.
Back to Top News
Top
July 13, 2026 at 6:14 AM
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்... பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய்க்கு அழைப்பு!
Polimer News