சட்டமன்றத்தில் தனது இருக்கைக்கு எதிரில் அமர்ந்து போராட்டம் செய்த எதிர்கட்சி எம்.எல்.ஏ தடுமாறிய நிலையில், அவரை தாங்கிப் பிடித்தபோது முதலமைச்சரின் உயர்ந்த உள்ளம் வெளிப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசினார். அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய சபாநாயகர், நமது முதலமைச்சர் அதிகம் பேசமாட்டார், ஆனால் கூர்ந்து கவனித்து பதில் அளிக்கக் கூடியவர் எனவும், அடுக்கு மொழியில் பேசியவர்களை பார்த்து ஓட்டுப் போட்ட காலம் எல்லாம் மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.