ஆட்சிப் பொறுப்பேற்ற 110 நாட்களில் என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் த.வெ.க. அரசு செய்திருப்பதாகவும், ஒரு வருடத்தில் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் பணத்தை யாரெல்லாம் திருடினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.