தி.மு.க. தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரித்தையும் சகிக்க முடியவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமாரை கண்டிக்காமல், அவருடைய தாயாரை இழிவுபடுத்துவதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எப்படி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள். திமுகவினரின் பேச்சைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதை சகிக்க முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவுபடுத்துவதா? இதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்? பொதுவெளியில் பெண்களை இழிவுபடுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் கட்சி தலைமை கண்டிக்க வேண்டும் - சண்முகம்