ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவரை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கிய வீடியோ வெளியான நிலையில், உதவி ஆய்வாளர் மார்ட்டினும் தலைமைக் காவலர் தனபாலும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மாது என்ற அந்த இளைஞரை வழக்கு ஒன்றில் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி இருவரும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.