ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில், சுமார் 82 சதவீத கட்டுமானங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவித்த பிறகு 9 சதவீத கட்டடங்கள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக, காசா மக்களில் சுமார் 21 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.