கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அரசுப் பேருந்தில் சக பெண் பயணியின் பர்சைத் திருடி கையும் களவுமாக சிக்கிய பெண்ணுக்குப் பளார் என கன்னத்தில் அறை விழுந்தது. முதலில் தாம் எடுக்கவே இல்லை என மல்லுக்கட்டிய பெண், மாட்டிக் கொண்டதும் தப்பியோட முயன்ற நிலையில், அவரை விரட்டிப் பிடித்துப் போலீசில் ஒப்படைத்தனர்.