மெட்டா ரே பேன் கிளாஸ் மூலம் திருவண்ணாமலை கோவில் கருவறையை படம்பிடிக்க முயன்ற ஐதாராபாத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் போலீசில் சிக்கினர். பவுனிஷ் மற்றும் மகேஷ் ஆகியோர் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த போது பவுனிஷ் அணிந்திருந்த கண் கண்ணாடியில் இருந்து வெளிச்சம் வந்துள்ளது. அதை ஊழியர்கள் பரிசோதித்த போது மெட்டா ரே பேன் கிளாஸ் என கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. கண்ணாடி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் அழிக்கப்பட்டன. மத்திய அமைச்சர் அமித்ஷா திருவண்ணாமலை கோவிலுக்கு வர உள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடந்ததால் அந்த இரு இளைஞர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.