இரண்டு வார கால லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு 2 தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வருகை தந்து வழக்கமான பணிகளை மேற்கொண்டார். சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்த அமைக்கப்பட்ட தங்கம் தென்னரசு தலைமையிலான மறுசீரமைப்பு குழுவினருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.