மத்திய அரசின் NMP 2.0 திட்டத்தின் கீழ் சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள 26 விமான நிலையங்களை பொது-தனியார் பங்களிப்பு மாதிரி அடிப்படையில் குத்தகைக்கு விட பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டம் குறித்து மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமான தொழில்நுட்ப நிபுணர் சிவகுமார் விளக்கமளித்துள்ளார். விமான நிலையங்களின் உரிமை மத்திய அரசின் வசம்தான் இருக்கும் என்றும் அதன் செயல்பாடு, நிர்வாகம், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மட்டுமே குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது என்றும் கூறினார். அரசுக்குச் சொந்தமான உள்கட்டமைப்பு சொத்துகளின் பொருளாதார மதிப்பை தனியார் பங்களிப்பு உள்ளிட்ட வழிகளில் பயன்படுத்தி முதலீட்டைத் திரட்டி அந்த மூலதனத்தை புதிய உள்கட்டமைப்பு திட்டங்களில் மீண்டும் முதலீடு செய்வதே இதன் நோக்கம் என்றும் சிவக்குமார் கூறினார். மத்திய அரசின் NMP 2.0 திட்டத்தின் கீழ் சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள 26 விமான நிலையங்களை பொது-தனியார் பங்களிப்பு மாதிரி அடிப்படையில் குத்தகைக்கு விட பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டம் குறித்து மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமான தொழில்நுட்ப நிபுணர் சிவகுமார் விளக்கமளித்துள்ளார். விமான நிலையங்களின் உரிமை மத்திய அரசின் வசம்தான் இருக்கும் என்றும் அதன் செயல்பாடு, நிர்வாகம், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மட்டுமே குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது என்றும் கூறினார். அரசுக்குச் சொந்தமான உள்கட்டமைப்பு சொத்துகளின் பொருளாதார மதிப்பை தனியார் பங்களிப்பு உள்ளிட்ட வழிகளில் பயன்படுத்தி முதலீட்டைத் திரட்டி அந்த மூலதனத்தை புதிய உள்கட்டமைப்பு திட்டங்களில் மீண்டும் முதலீடு செய்வதே இதன் நோக்கம் என்றும் சிவக்குமார் கூறினார்.
Back to Top News
Top
September 20, 2026 at 12:17 PM
மத்திய அரசின் NMP 2.0 திட்டத்தின் நோக்கம் என்ன?
Polimer News