காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சர்வதேச இஷின்ரியு கராத்தே விழாவில், பட்டு வேட்டி-சட்டையுடன் பங்கேற்ற ஜப்பான் கிராண்ட் மாஸ்டர் ஜெரார்டோ கான்டோரேவுக்கு கரகாட்டத்துடன் தமிழ்ப் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்விழாவில், தற்காப்புக் கலைகளின் முன்னோடியான போதிதர்மரின் சிலை திறக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களுக்குக் கருப்பு பெல்ட் வழங்கப்பட்டது.