திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பத்தியவாடி கிராமத்துக்கு, போதிய சாலை வசதி இருந்தும் பேருந்து வசதி இல்லை என கிராம மக்கள் தெரிவித்தனர். எந்த ஒரு தேவைக்கும் கலசபாக்கம் மற்றும் போளூருக்குச் செல்லவேண்டி இருப்பதால், பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவ, மாணவிகள், நடந்தும், சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகளிலும் பள்ளிக்குச் செல்லும் நிலை உள்ளதாகவும், அரசு உடனடியாக பேருந்துகள் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.