கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் உள்ள சாமி ஏரியில் தண்ணீர் குடிக்க குட்டிகளுடன் வந்த நரிகள் கூட்டம் சுதந்திரமாக விளையாடி மகிழ்ந்தன. ஏரியில் நரிகள் கூட்டம் நிற்பதை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது செல்போன்களில் அதனை வீடியோ எடுத்து ரசித்தனர்.