சென்னை மெரினா கடற்கரையில் கழிவுநீர் கலப்பதால் தூய்மையான கடற்கரைகளுக்கு வழங்கப்படும் சர்வதேச அங்கீகாரமான நீலக் கொடி சான்று பெறுவதில் சிக்கல் நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மெரினா நீச்சல் குளம் அருகே உள்ள, 20 ஏக்கர் பகுதி நீலக்கொடி மண்டலமாக மாற்றப்பட்டு அங்கு குழந்தைகள் விளையாட்டு பகுதிகள்,கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும்,கடற்கரையை ஒட்டியுள்ள நேப்பியார் பாலம் வழியாக கழிவு நீர் முகத்துவாரம் மூலம் கடலில் கலப்பதால் கடற்கரை தண்ணீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லாததாலும் அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும் நீலக் கொடி சான்று வழங்க மறுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Back to Top News
Top
August 18, 2026 at 12:39 PM
மெரினா கடற்கரைக்கு சர்வதேச அங்கீகாரமான நீலக் கொடி சான்று பெறுவதில் சிக்கல்..!
Polimer News