தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக எழுந்த புகாரில், கரூரில் சிவசக்தி நகரில் உள்ள குடோன் ஒன்றில் சோதனை செய்த அதிகாரிகள், பிளாஸ்டிக் கவர்கள், டீ டம்ளர்கள், தண்ணீர் டம்ளர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்ததோடு, குடோனுடன் கூடிய தயாரிப்பு கூடத்திற்கும் சீல் வைத்தனர்.