அரபிக் கடலில் இந்திய போர் கப்பல் மீது பாகிஸ்தான் போர் கப்பல் மோதியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வடக்கு அரபிக் கடலில் இந்திய போர் கப்பல் கடந்த 15ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்தச் சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாகிஸ்தான் கடற்படையின் இந்த செயல் தொழில்முறைக்கு ஒவ்வாத, ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று என அந்நாட்டுத் தூதரை அழைத்து மத்திய அரசு கண்டித்துள்ளது. சர்வதேச கடல் எல்லையில் இருநாட்டு கப்பல்களும் குறைந்தது மூன்று கடல் மைல் தொலைவு இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்ற ஒப்பந்த விதியை மீறும் வகையில் பாகிஸ்தான் நடந்து கொண்டதாக அந்நாட்டு தூதருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.