வரும் செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீரில் எளிதில் கரையக் கூடிய களிமண்,காகித கூழ் போன்றவற்றின் மூலம் தாமரை விநாயகர்,அர்த்தநாரி விநாயகர் உள்ளிட்டபல்வேறு வடிவங்களில் 2 இன்ச் முதல் 10 அடிவரையிலான சிலைகள் தயாரித்து வருவதாகக் கூறினார்.