ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசு நாட்டின் மழைக் காடுகளில் புதிய குரங்கு வகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வாயைச் சுற்றி ஆரஞ்சு-வெளிர் நிறத்தில் முகமூடி போன்ற தோற்றத்துடன், தனித்துவமான ஒலி எழுப்பக்கூடியதாக அந்தக் குரங்குகள் உள்ளன. உள்ளூர் சமூகத்தினரால் லிக்வெலி (Likweli) என அறியப்பட்ட அந்தக் குரங்கினத்துக்கு விலங்கியல் விஞ்ஞானிகள் கொலோபஸ் காங்கோயென்சிஸ் (Colobus congoensis) எனப் பெயரிட்டுள்ளனர்.