நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடரில் சிக்கி 275 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 128 பேரின் நிலை குறித்தும் இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து 598 இந்தியர்கள் நேபாளம் வந்தடைந்தனர் சீனாவில் இருந்த 598 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாளம் வந்தடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், மேலும் சுமார் 900 இந்தியர்கள் சீனாவிலேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேபாளத்துக்கு இந்தியா நிவாரண உதவி நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், இந்தியா சார்பில் மேலும் 11 டன் நிவாரணப் பொருட்கள் ராணுவ சரக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உணவுப் பொருட்கள், மருந்துகள், ஜெனரேட்டர்கள், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இந்த உதவிகளுடன், இதுவரை மொத்தம் 68 டன் நிவாரணப் பொருட்கள் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க நிபுணர் குழு நேபாளத்தில் உள்ள நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பகுதியில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க, இந்தியாவில் இருந்து தேவையான உபகரணங்களுடன் நிபுணர் குழு நேபாளம் சென்றுள்ளது. சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்பதற்கான நடவடிக்கைகளில் இந்தக் குழு ஈடுபட உள்ளது. அடையாளம் தெரியாத சடலங்களுக்கு DNA பரிசோதனை மேலும், பேரிடரில் உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்படாத சடலங்களை அடையாளம் காணும் பணிக்காக DNA பரிசோதனை மேற்கொள்ள தடயவியல் நிபுணர்களும் நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்து தொடர்ந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Back to Top News
Top
August 30, 2026 at 2:47 AM
நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி இந்தியர்கள் 275 பேர் மாயமானதாக மத்திய அரசு தகவல்... மீட்பு பணிகள் தீவிரம்
Polimer News