மதுரையில் வி த லீடர்ஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, முதலமைச்சர் விஜய் எமிரேட்ஸ் விமானத்தைப் பிடித்து லண்டன் செல்வதற்குப் பதிலாக , இண்டிகோ விமானத்தைப் பிடித்து மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இங்குள்ள தொழிலதிபர்களுக்கு சலுகைகளை அறிவித்து முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் எனக் கூறினார். மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் விஐபிக்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் உள்ளூர் மக்களுக்கு அளிக்கப்படவில்லை என்று கூறிய அண்ணாமலை, நாம் ஆட்சிக்கு வந்ததும் அறநிலையத்துறை அகற்றப்படும் என்றார். பெரியார் பிறந்தநாளுக்குத் தாம் வாழ்த்து தெரிவித்ததை சிலர் விமர்சிக்கின்றனர் என்றும் பாஜகவில் இணைந்த நாள் முதலே பெரியார் விஷயத்தில் தாம் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.
Back to Top News
Top
September 20, 2026 at 10:53 AM
"முதலீடுகளை ஈர்க்க லண்டன் செல்ல வேண்டிய அவசியமில்லை" - அண்ணாமலை
Polimer News