பழனி கோவில் நிலப்பதிவு தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் முதல் நாளே டோக்கன் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதால் கோவில் நிலம் என்று தெரிந்தே நிலப் பதிவு நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சார்பதிவாளர் அலுவலகங்களில் கோவில் நிலம் உட்பட அரசு நிலங்கள், பதிவுக்கு உகந்தவை அல்ல என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அவற்றை மீறி நிலத்தை பதிவு செய்துள்ளதாக அவர் விமர்சித்தார்.